Sunday, January 4, 2009

சுப்பன்,ரங்கன் அரட்டை ...(29.12.2008-02.01.2009)

ரங்கன் :

ஹாப்பி நியூ இயர் சுப்பா....

சுப்பன் :

சேம் டு யு டா...

ரங்கன் :

அப்புறம் போனவாரம் என்ன ஏதாவது லாபம் பாத்தியா ....

சுப்பன் :

இல்ல ரங்கா....இந்த நியூ இயர் ஆரம்பமே எனக்கு நஸ்டத்தே கொடுத்துடுச்சு...மார்க்கெட் ஏறங்கும்னு நினைச்சு நிபிட்டில ஷார்ட் போய்ட்டேன்...செம லாசுப்பா.....

ரங்கன் :

நான் தான் சொன்னேன்ல... அரசு அறிவுப்பு இருக்குதுன்னு... அப்புறம் ஏன் இப்படி பண்ண.....

சுப்பன் :

முடிஞ்சதுக்கு அப்புறம் சொல்றது ஈசி....முன்னாடியே அடிச்சு சொல்லணும்.... ( ஆ...ஏண்டா அடிக்கிற ...)

ரங்கன் :

நீ தானே அடிச்சு சொல்லணும் சொன்னே ....அதான்....

சுப்பன் :

சரி இந்த வாரம் என்ன நடக்கும்னு நினைக்கிறே சொல்லு பாப்போம் ....

ரங்கன் :

அப்படி கேளு சுப்பா .... இந்த நல்ல சேதி வரும்னு முன்னாடியே தெரிஞ்சு போச்சு அதனால தேவையானத நம்ம லோக்கல் பயலுகளும் , வெளிநாட்டு பயலுகளும் வாங்கி போட்டுட்டாங்க...அதனால கொஞ்சம் கேர்புல்லா இருக்கனும்....

ரங்கன் :

2900,2985,3030,3090,3120,3250 இந்த ஆறு லெவலையும் மனசுல வச்சிக்கோ....இந்த இடம் வரும்போது வாங்கிறவங்க ரொம்ப அதிகமா இருந்தா வாங்கிப் போடு ....இல்லனா வித்துடு... முன்னாடி உள்ளத சப்போர்ட்டாவும் பின்னாடி உள்ளத ரெசிஸ்டன்ஸாவும் வச்சுக்கோ.... டெய்லி ஒனக்கு சொல்லிட்டு இருக்க முடியாது…..

சுப்பன் :

(ஆமா இததான் எல்லோரும் சொல்லுவாங்களே....ட்ரேடிங் செய்ரப்போதானே அல்லு அந்து போகுது....)

ரங்கன் :

எல என்ன முனகுரே .....

சுப்பன் :

ஒன்னும் இல்ல ...ஒன்னும் இல்ல...

ரங்கன் :

அப்புறம் இந்த நல்ல சேதி வந்ததுல்ல...அதனால L&T, IDFC, PFC,REC,HINDUSTAN CONSTRUCTION, அப்புறம் ஆட்டோ துறையில TATA MOTORS,ASHOK LEYLAND,ESCORTS அப்புறம் ரியல் எஸ்டேட் துறையில DLF,PARSVNATH DEVELOPERS ,ANSAL PROPERTIES இவனுங்களுக்கெள்ளாம் நல்ல காலம் வரும்னு எதிர் பாக்றானுங்கோ.....அதனால நீயும் ஒரு கண்ணு வச்சுக்கோ...


சுப்பன் :

இப்படியே மொட்டையாவே சொல்லு...வாரமலர்ல கருப்பு பூனை சொல்லறது மாதிரியே....

ரங்கன் :

டேய் இப்போ தானே வந்திருக்கேன்...பொறு,,, இப்போதைக்கு என் காதுக்கு வந்த செய்தி மட்டும்தான் சொல்ல முடியும் .....

ரங்கன் :

சரி … 2009 கனவுகன்னி யாரு... CNBC பாத்துட்டு இருந்ததினாலே... சன் டிவி பாக்க முடியல..

சுப்பன் :

ரொம்ப ரொம்ப முக்யம் பாரு .....போடா போய் உருபடுற வழிய பாரு...

ரங்கன் :

டேய் மூஞ்ச தொங்க போட்டு திரியாத டா ...நாய் வந்து கடிச்சிரப்போது....அடுத்த வாரம் நல்ல காலம் பொறக்கும்... கவலை படாம இரு....

சற்று தெளிந்த மனிலையில் சுப்பன் அங்கிருந்து விடை பெறுகிறான்.....

(சுப்பன்,ரங்கன் அரட்டை தொடரும்.......)


No comments: